புதுதில்லி:
கொரோனா ஊரடங்கால்ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுகிறோம் என்ற பெயரில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது,ரூ. 30 ஆயிரம் கோடிக்கு கலால் வரியை (Excise Duty) உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுவது இல்லை. மாறாக பல்வேறு வரிகளைப் போட்டு, மோடி அரசு பெட்ரோல் - டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.கடந்த மார்ச் மாதம் பெட்ரோல்லிட்டருக்கு 18 ரூபாய் மற்றும் டீசல்லிட்டருக்கு 12 ரூபாய் என்று கலால்வரியை உயர்த்த, நாடாளுமன்றத்திடம் மோடி அரசு ஒப்புதல் பெற்றது.அதைத்தொடர்ந்து மே மாதம் பெட்ரோலுக்கு 12 ரூபாய், டீசலுக்கு
9 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது மீண்டும் கலால்வரியை உயர்த்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது.தற்போது கொரோனா ஊரடங்கால் பொருளாதார மந்தம் மற்றும் நிவாரண நிதிச்சுமை அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை அளித்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்காகவே எரிபொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்படுகிறது என்றும், இந்தஉயர்வு பெட்ரோலுக்கு லிட்டருக்குரூ. 6 ஆகவும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.3 ஆகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு மொத்தம் ரூ.60 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நிதியாண்டுமுடிவதற்கு இன்னும் சில மாதங் களே உள்ளதால் நடப்பாண்டில் ரூ. 30 ஆயிரம் கோடி அளவிற்கே வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.